‘வலைப்பூ ஆய்வு’ பகுப்புக்கான தொகுப்பு

வலைப்பூ ஆய்விற்காக – என்னைப் பற்றி கொஞ்சம்

வலைப்பதிவர் பெயர்:முத்துகுமரன்

வலைப்பூ பெயர் : முத்துகுமரன், என் பார்வையில்

சுட்டி(url) : www.muthukumaran1980.blogspot.com ; www.eenpaarvaiyil.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: துபாய் தற்சமயம். சொந்த ஊர் மதுரை
நாடு:தமிழ்நாடு
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
முத்துகுமரன் – ஜூன் 25 2005
என் பார்வையில் – அக்டோபர் 21 2005

இது எத்தனையாவது பதிவு: 76
இப்பதிவின் சுட்டி(url): http://muthukumaran1980.blogspot.com/2006/06/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் எண்ணங்களை, கவிதைகளை வெளிப்படுத்த.
சந்தித்த அனுபவங்கள்: பலதரப்பட்ட மனிதர்களும், அவர்கள் குணங்களும்,
பெற்ற நண்பர்கள்: நேரில் காணாவிடினும் நெருங்கிய உறவுகள் போன்று கிடைத்திருக்கும் நண்பர்களும், ஒத்த சிந்தனையுடைய நண்பர்களும், மாற்றுச் சிந்தைனையிருபினும் பண்போடு பழகும் நண்பர்களும் என நிறைவான நண்பர்கள்.
கற்றவை: கற்றது கொஞ்சமே. கற்க வேண்டியிருப்பது நிறைய.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எனக்குள் தோன்றும் எண்ணங்களை சிந்தனைகளை சுயதணிக்கைக்குப்பிறகு எந்த வித தடையுமின்றி வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதே மிகப்பெரிய சுதந்திரம்தான்.
கிடைத்த சுதந்தரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறேன்.

இனி செய்ய நினைப்பவை: சமூகத்திற்கு பயன்படத்தக்க வகையில் வாழ்க்கையை அமைத்துகொள்ள வேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
வீட்டிற்கு மூத்தவன், பிறந்தது பின்பு பெரும்பகுதி வளர்ந்தது திருவரங்கம் என்றாலும் எப்போதும் மதுரைக்காரனாகவே உணர்பவன். படித்தது பொறியியல். பணிபுரிவது அமீரகத்தின் துபாயில். தமிழ் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவன். கவிதைகளில் ஆர்வமுடையவன். விரைவில் முதல்கவிதைத் தொகுப்பு ”தமிழ்அலை’‘ வெளியீடாக விரைவில் வர இருக்கிறது.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
பெரியாரை நோக்கி என்னைத் திருப்பிய பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.