‘சொந்தக்கதை’ பகுப்புக்கான தொகுப்பு

மீண்டும்

அப்பாடா

மறுபடியும் அமீரகம் வந்து சேர்ந்தாகிவிட்டது. இந்த விடுமுறை மிக பரபரப்பான விறுவிறுப்பான விடுமுறையாக இருந்தாலும் மனநிறைவானதொரு விடுமுறையாக அமைந்துவிட்டது.
எத்தனை அலைச்சல், எத்தனை குடைச்சல்கள் என ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒருவழியாக 14ம் தேதி துபாய்க்கரையோரம் ஒதுங்கிவிட்டேன்.

ஆம். நிறைய மனநிறைவுகள் இந்த விடுமுறையில்

1.சொந்த வீடு வாங்கி குடியேறியாகிவிட்டது.

2. ஒப்புதல் கிடைத்துவிட்ட அண்ணா- அண்ணி காதல்

3. வலை நண்பர்கள் உடனான சந்திப்பு(டோண்டு முதல் சந்திப்பு வரை)

4. திராவிட தமிழர்களுடனான சந்திப்பு.

5.லிவிங் ஸ்மைல் உடனான சந்திப்பு

6. அறிவுமதி அண்ணனுடனான சந்திப்பு (கொளத்துர் மணியுடன்)

6.புலவர். கலியபெருமாளின் மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்தேசிய சிந்தனையாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் ஒருங்கே காணும் வாய்ப்பு பெற்றது

7. சுப.வீ அவர்களுடனான சந்திப்பு

8. முத்து தமிழினியுடன் சென்று அய்யா. பழ. நெடுமாறனுடன் கழித்த அந்த ஒன்றரை மணி நேரம்

9. குமுதம் உதவியாசிரியர் கடற்கரய் மற்றும் ஓவியர் கண்ணாவுடன் கழித்த மணித்துளிகள்

10. மதுரை புத்தகக்கண்காட்சியில் கவிஞர்.பிரான்சிஸ்கிருபாவுடன் செலவிட்ட மணித்துளிகள், புத்தகங்கள் வாங்கசெலவழித்த 4 மணி நேரங்கள்

இடைவிடாத ஒட்டத்தில் மனதிற்கு இதமளித்த சந்திப்புகள் புத்துணர்வைத் தந்தன. ஓடிக்கொண்டே இருந்ததால்தான் என்னவோ வீட்டை விட்டு பிரியும் போது மனம் வலித்தது. வெறுப்புடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஏக்கப் பெருமூச்சோடு சென்னை புறப்பட்டேன். துபாய் வந்தும் சேர்ந்தேன்.

சந்திப்புகளை நேரம் கிடைத்தால் விரிவாக எழுதுவேன்.

எனவே மக்களே

மத்தபடிக்கு

கச்சேரி

மீண்டும் ஆரம்பம்..