மே, 2007 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்

காய்ச்சல்

இனிக்கவில்லை
நேற்று வந்த காய்ச்சல்!
அருகில்
நீ இல்லாது போனதால்.

காய்ச்சல்

இனிக்கவில்லை
நேற்று வந்த காய்ச்சல்!
அருகில்
நீ இல்லாது போனதால்.

மணமாலையும் மஞ்சளும் சூட…

இன்று எனது உயிர்நண்பன் M. பாலாஜி க்குத் திருமணம். கல்லூரியில் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் அளவிற்கு நாங்கள் நெருக்கம். ஒரே அறையில்லாவிட்டாலும் அறைநண்பன். கல்லூரி சேர்ந்த போது இவனது ஊரை அறிந்து கொண்டு நிச்சயம் இவனை நண்பனாக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( ஏன் என்பது இப்போது அவ்வளவு முக்கியம்ற்றது. சிரித்துகொள்ள மட்டும் நினைத்துக்கொள்வேன்). ஆனால் இயல்பாகவே நண்பர்களாகிவிட்டோம். என் மனமறிந்த உற்ற நண்பன். இயல்பான இனிமையான சோம்பேறி அவன். அவன் திருமண பத்திரிக்கை கூட நான் தொலைபேசி வாங்கினேன். அதுவும் சென்ற வாரத்தில்தான் :-) .

தொலைபேசியில் அழைத்து மண்டகப்படி அர்ச்சனை செய்ய போதும்டா விடுடா என்றான். ஒழுங்கா 5 நிமிடம் திட்டு வாங்கிக் கொள் என்று சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டு திட்டி முடித்தவுடன் இரு கான்பிரன்ஸில் போடுறேன் அவங்ககிட்ட பேசு என்றான். அதான் என் பாலாஜி. இணைப்பு கிடைத்ததும் முதல் வார்த்தை சொன்னேன் உனக்கு நான் இன்றையிலிருந்து அண்ணன்மா. எதுவும் சேட்டை செய்தான் என்றால் சொல் கவனித்துக் கொள்கிறேன் என்று. சரி அண்ணா என்று சொன்னதும் அன்றைய ஒரு மணி நேர உரையாடலில் ஆத்மார்த்தமாக அண்ணா என்று அழைத்ததும் மனதில் இனிமையாக நிற்கிறது. இனிமையான நட்பு இன்று உறவாக அடுத்த நிலைக்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம் போல் வெளிநாட்டு சம்பாத்தியத்தினால் இன்னொரு முறை ஏமாற்றம். நேரில் காண மிகவும் விரும்பிய திருமணம். மறுபடியும் அதே ஓரிரு மாத இடைவெளியினால் இழந்திருக்கிறேன்.

இன்று மணமாலை சூடிக் கொள்ளும் பாலாஜி-மல்லிகா
தம்பதியினருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

என்னோடு நீங்களும் வாழ்த்துங்களேன்



மணமாலையும் மஞ்சளும் சூட…

இன்று எனது உயிர்நண்பன் M. பாலாஜி க்குத் திருமணம். கல்லூரியில் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் அளவிற்கு நாங்கள் நெருக்கம். ஒரே அறையில்லாவிட்டாலும் அறைநண்பன். கல்லூரி சேர்ந்த போது இவனது ஊரை அறிந்து கொண்டு நிச்சயம் இவனை நண்பனாக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்( ஏன் என்பது இப்போது அவ்வளவு முக்கியம்ற்றது. சிரித்துகொள்ள மட்டும் நினைத்துக்கொள்வேன்). ஆனால் இயல்பாகவே நண்பர்களாகிவிட்டோம். என் மனமறிந்த உற்ற நண்பன். இயல்பான இனிமையான சோம்பேறி அவன். அவன் திருமண பத்திரிக்கை கூட நான் தொலைபேசி வாங்கினேன். அதுவும் சென்ற வாரத்தில்தான் :-) .

தொலைபேசியில் அழைத்து மண்டகப்படி அர்ச்சனை செய்ய போதும்டா விடுடா என்றான். ஒழுங்கா 5 நிமிடம் திட்டு வாங்கிக் கொள் என்று சொல்ல பொறுமையாக கேட்டுக் கொண்டு திட்டி முடித்தவுடன் இரு கான்பிரன்ஸில் போடுறேன் அவங்ககிட்ட பேசு என்றான். அதான் என் பாலாஜி. இணைப்பு கிடைத்ததும் முதல் வார்த்தை சொன்னேன் உனக்கு நான் இன்றையிலிருந்து அண்ணன்மா. எதுவும் சேட்டை செய்தான் என்றால் சொல் கவனித்துக் கொள்கிறேன் என்று. சரி அண்ணா என்று சொன்னதும் அன்றைய ஒரு மணி நேர உரையாடலில் ஆத்மார்த்தமாக அண்ணா என்று அழைத்ததும் மனதில் இனிமையாக நிற்கிறது. இனிமையான நட்பு இன்று உறவாக அடுத்த நிலைக்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம் போல் வெளிநாட்டு சம்பாத்தியத்தினால் இன்னொரு முறை ஏமாற்றம். நேரில் காண மிகவும் விரும்பிய திருமணம். மறுபடியும் அதே ஓரிரு மாத இடைவெளியினால் இழந்திருக்கிறேன்.

இன்று மணமாலை சூடிக் கொள்ளும் பாலாஜி-மல்லிகா
தம்பதியினருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

என்னோடு நீங்களும் வாழ்த்துங்களேன்