ஜனவரி, 2007 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்
மகாத்மாவின் அரசியல்
சாதி மதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது. சாதி ஒரு நடைமுறை வழக்கமே. சாதியின் மூலம் எதுவென்று எனக்குத் தெரியாது.
என் ஆன்மீக வேட்கையைத் தணித்துக்கொள்ள சாதியின் மூலத்தை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் சாதி ஆன்மிக வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்க கூடியது என்பது எனக்குத் தெரியும். வர்ணம், ஆசிரமம் ஆகிய நிறுவனங்கள் சாதிகளோடு சிறிதும் தொடர்பு இல்லாதவை.
வருணச்சட்டம் நமக்குக் கற்பிப்பது என்ன?
பரம்பரைத் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவருவரும் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே. வர்ணச்சட்டம் நம் உரிமைகள் என்ன என்பதைக் கூறவில்லை. கடமை என்ன என்பதையே கூறுகிறது. மனித குலத்திற்கு நன்மை செய்வதற்கான தொழில்களைப்பற்றியே அது பேசுகிறது. வேறு எதையும் அல்ல. மிகவும் உயர்ந்த தொழில் அல்லது மிகவும் தாழ்ந்த தொழில் என்று எந்த தொழிலும் இல்லை என்பதும் இதனால் விளங்கும்.
எல்லாத் தொழில்களும் நல்லவைதான். சட்டத்திற்கு உட்பட்டவைதான். ”எல்லா வகையிலும் சம அந்தஸ்து கொண்டவைதான். ஆன்மீக குருவாக இருப்பது என்னும் பிராமணனின் தொழிலும் கோட்டி ஒருவனின் தொழிலும் சமமானவையே. தத்தமக்குரிய கடமைகளைபிராமணனும் கோட்டியும் சரிவரச் செய்து ஒரு காலத்தில் கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்பு உடையதாகவே காட்சியளித்தது. மனிதனிடமுருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்று வந்ததாக தெரிகிறது.பிராமணன் ஆனாலும் சரி கோட்டி ஆனாலும் சரி வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அவர்கள் அத்தொழிலை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் இல்லை. இன்றுங்கூட கிராமங்களில் இந்த சட்டம் சிறப்பான முறையிலே செயல்பட்டு வருகிறது என்பதற்கு சில அடையாளங்கள் காணப்படுகின்றன. 600 பேரே உள்ள சீகன் என்ற ஊரில் பிராமணர்கள் உள்ளிட்ட பலவேறு தொழிலாளிகளின் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சீரழிந்த இந்தக்காலத்திலும் நான் உண்மையான பிராமணர்களைப் பார்க்கிறேன். அந்தப் பிராமணர்கள் அவர்களுக்குப் பிறர் மனமுவந்து இடும்பிச்சையால் உயிர்வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய ஆன்மிக அறிவு, அனுபவம் என்கிற அரிய சொத்தை மனமுவந்து பிறருக்கு வழங்குகிறார்கள். தாங்கள் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிக் கொண்டு அதே நேரத்தில் அந்த வர்ணத்திற்குரிய ஒரே ஒரு செயல்பாட்டு விதியையும் வெளிப்படையாக மீறி நடக்கிற மனிதர்களின் வாழ்க்கையில் காணப்படும் கேலிக்கூத்துகளை கொண்டு வர்ண சட்டத்தை ஆராய முற்படுவது பிழையானது. முற்றிலும் முறையற்றது. மற்ற எந்த வர்ணத்தை விடவும் தங்கள் வர்ணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வருணம் என்று எந்த வருணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது. அவ்வாறு செய்வது வர்ணச் சட்டத்தை மறுப்பதே ஆகும்.
தீண்டாமையை நம்பச் சொல்கிற எந்த அம்சமும் வருணச் சட்டத்தில் இல்லை. ( சத்தியமே கடவுள், அகிம்சையே மனித குலத்தின் சாரம் என்பது இந்து மதத்தின் சாராம்சம்)
டாக்டர் அம்பேத்கார் மட்டும் அல்ல இந்து மதம் பற்றி நான் தந்திருக்கிற இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து இன்னும் பல தலைவர்கள் எதிர்வாதம் புரிவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்வாதத்தால் என் நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. இந்த விளக்கத்தின் படிதான் கடந்த 50ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு என் வாழ்க்கையை அந்த விளக்கத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.
-”மகாத்மா” காந்தி – ‘ஹரிஜன்’, ஜூலை 18, 1936. *
விடுதலை கோரி
போராட்டம்- ஆங்கிலேயனிடம்
தன்னைத் தக்கவைக்க
அடமானம் ஆரியனிடம்
ஹே ராம்!!! *
மகாத்மாவின் ஆரசியல்
சாதி மதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது. சாதி ஒரு நடைமுறை வழக்கமே. சாதியின் மூலம் எதுவென்று எனக்குத் தெரியாது.
என் ஆன்மீக வேட்கையைத் தணித்துக்கொள்ள சாதியின் மூலத்தை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் சாதி ஆன்மிக வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்க கூடியது என்பது எனக்குத் தெரியும். வர்ணம், ஆசிரமம் ஆகிய நிறுவனங்கள் சாதிகளோடு சிறிதும் தொடர்பு இல்லாதவை.
வருணச்சட்டம் நமக்குக் கற்பிப்பது என்ன?
பரம்பரைத் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவருவரும் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே. வர்ணச்சட்டம் நம் உரிமைகள் என்ன என்பதைக் கூறவில்லை. கடமை என்ன என்பதையே கூறுகிறது. மனித குலத்திற்கு நன்மை செய்வதற்கான தொழில்களைப்பற்றியே அது பேசுகிறது. வேறு எதையும் அல்ல. மிகவும் உயர்ந்த தொழில் அல்லது மிகவும் தாழ்ந்த தொழில் என்று எந்த தொழிலும் இல்லை என்பதும் இதனால் விளங்கும்.
எல்லாத் தொழில்களும் நல்லவைதான். சட்டத்திற்கு உட்பட்டவைதான். ”எல்லா வகையிலும் சம அந்தஸ்து கொண்டவைதான். ஆன்மீக குருவாக இருப்பது என்னும் பிராமணனின் தொழிலும் கோட்டி ஒருவனின் தொழிலும் சமமானவையே. தத்தமக்குரிய கடமைகளைபிராமணனும் கோட்டியும் சரிவரச் செய்து ஒரு காலத்தில் கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்பு உடையதாகவே காட்சியளித்தது. மனிதனிடமுருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்று வந்ததாக தெரிகிறது.பிராமணன் ஆனாலும் சரி கோட்டி ஆனாலும் சரி வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அவர்கள் அத்தொழிலை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் இல்லை. இன்றுங்கூட கிராமங்களில் இந்த சட்டம் சிறப்பான முறையிலே செயல்பட்டு வருகிறது என்பதற்கு சில அடையாளங்கள் காணப்படுகின்றன. 600 பேரே உள்ள சீகன் என்ற ஊரில் பிராமணர்கள் உள்ளிட்ட பலவேறு தொழிலாளிகளின் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சீரழிந்த இந்தக்காலத்திலும் நான் உண்மையான பிராமணர்களைப் பார்க்கிறேன். அந்தப் பிராமணர்கள் அவர்களுக்குப் பிறர் மனமுவந்து இடும்பிச்சையால் உயிர்வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய ஆன்மிக அறிவு, அனுபவம் என்கிற அரிய சொத்தை மனமுவந்து பிறருக்கு வழங்குகிறார்கள். தாங்கள் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிக் கொண்டு அதே நேரத்தில் அந்த வர்ணத்திற்குரிய ஒரே ஒரு செயல்பாட்டு விதியையும் வெளிப்படையாக மீறி நடக்கிற மனிதர்களின் வாழ்க்கையில் காணப்படும் கேலிக்கூத்துகளை கொண்டு வர்ண சட்டத்தை ஆராய முற்படுவது பிழையானது. முற்றிலும் முறையற்றது. மற்ற எந்த வர்ணத்தை விடவும் தங்கள் வர்ணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வருணம் என்று எந்த வருணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது. அவ்வாறு செய்வது வர்ணச் சட்டத்தை மறுப்பதே ஆகும்.
தீண்டாமையை நம்பச் சொல்கிற எந்த அம்சமும் வருணச் சட்டத்தில் இல்லை. ( சத்தியமே கடவுள், அகிம்சையே மனித குலத்தின் சாரம் என்பது இந்து மதத்தின் சாராம்சம்)
டாக்டர் அம்பேத்கார் மட்டும் அல்ல இந்து மதம் பற்றி நான் தந்திருக்கிற இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து இன்னும் பல தலைவர்கள் எதிர்வாதம் புரிவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்வாதத்தால் என் நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. இந்த விளக்கத்தின் படிதான் கடந்த 50ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு என் வாழ்க்கையை அந்த விளக்கத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.
-”மகாத்மா” காந்தி – ‘ஹரிஜன்’, ஜூலை 18, 1936. *
விடுதலை கோரி
போராட்டம்- ஆங்கிலேயனிடம்
தன்னைத் தக்கவைக்க
அடமானம் ஆரியனிடம்
ஹே ராம்!!! *
பெண்களுடமையாக
முக்தி பெற வந்து
சதைகளை பார்த்து
மூர்ச்சையாகிப் போகும்
ஆண்களைத் துரத்தி
ஆக்கிடுவோம் ஆலயங்களை
பெண்களுடைமையாக
மறைந்த நிலா
இரவின் பனி தலைநனைக்க
நின்று கொண்டிருந்தேன்
பேருந்து நிறுத்தமொட்டிய
பூங்காவில் .
இங்குமங்கும்
சிறகடித்துத் திரியும் பட்டாம்பூச்சிகளாக
பல மொழிகளில் மழலைகளின்
இசை மழை.
இதயம் நகராது நிற்க
வந்துவிட்ட கடைசிப் பேருந்தில்
ஏறிக்கொண்டேன்.
ஏதோ யோசனையிலிருந்தவனை
கலைத்துப்போட்டது ஒரு பெரும்சிரிப்பு.
முன் இருக்கையில்
காதலன் வேண்டாமென்று
மறுத்தும்
விழுந்துவிட்ட தூசியை
ஊதி எடுத்துக்கொண்டிருந்தாள்
காதலி
ஒரு புன்னகை உதிர்த்து
இருக்கையில் சாய்ந்து கொண்டேன்
வானில் மேகத்திற்குள்
தன்னை மறைந்து கொண்டது
நிலா
மெளனமாய்
நேசத்தின் பயணமாக நீள்கிறது
பிரிவின் முற்றுப்புள்ளிகள்!
இடைவெளிகளெங்கும்
அன்பை நிறைத்திட்ட
இதயம் துடிக்கிறது
மெளனமாய்!!
அப்பத்தாவின் ஆத்மா
//மெய்மறந்த நிலையில் வரது ஆழ்மனதில் அவர் மானசீகமாகப் பின்பற்றும் இந்துதருமம் வார்த்தைகளாக வந்து வெளிப்பட்டிருக்கிறது. மெய்மறத்தல் விடுதலை செய்த உண்மை கறுப்புச்சட்டை போட்டு கடவுள் இல்லை என்பவர் தனது அப்பத்தாவின் ஆத்மா அக்காவின் மகளாக மீண்டும் தம்மிடம் வரவேண்டும் என்கிற அவாவாக வெளிப்பட்டு இருக்கிறது.//
கடவுள் இல்லை என்பவர் – ஹரிஹரன் வர்ணத்தை போதிக்கும் கடவுளர்களைத்தான் நான் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். தன் குழந்தைகளிடமே வேறுபாடு காட்டுபவன் கடவுளாக இருக்க முடியாது. நான்
எனது பிராத்தனைகளை சமர்பித்தது உங்கள் இந்து மத வேதநெறி கடவுளர்களிடம் இல்லை. என் அப்பத்தாவிடம் மட்டுமே. இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. முன்னோர் வழிபாட்டில் மிக ஆழமான நம்பிக்கை கொண்டவன் என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை.
விரிவாக பேசும் முன்னர் சில சுய விளம்பரங்கள்.
என் வலைப்பதிவின் வாசகத்தை படித்திருப்பீர்கள். எங்கும் எதிலும் அன்பையும் நட்பையும் விரும்பும் எளியன். ஆமாம். எல்லா மனிதர்களிடமும் அன்பையும் நட்பையும் தனிப்பட்ட முறையில் விரும்புவேன். இது என்னோடு பழகியவர்களுக்கு மிக தெளிவாக புரியும். மேலும் உறவுகளின் மீது நான் அளவு கடந்த அன்பைக் கொண்டவன். மிகவும் மென்மையான இதயம் என்னுடையது. என் அன்பை பல இடங்களில் வெளிக்காட்டிக் கொள்ளாது இதயத்திலேயே பூட்டி வைத்துக் கொண்டவனும்கூட. அதனால் அவை வெளிப்படுகையில் எந்த விதமான அரிதாரங்களும் இன்றி அப்படியே வெளிப்படும். மேலும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்கள் மீது மிக அதிக மதிப்பு கொண்டவர்கள். பெண்களை, உண்மையான செல்வங்களாக நினைப்பவர்கள். சனாதானம் வகுத்திருக்கும் கீழானவர்களாக பெண்களை நடத்துவது கிடையாது. நாங்கள் எங்கள் சகோதரிகளையோ, எங்கள் வயதை ஒத்த பெண்களையோ விளையாட்டுத்தனமாய் கூட ஏய் என்றெல்லாம் கூப்பிட முடியாது. எந்த பக்கமிருந்து யாருடமிருந்து அறை விழும் என்று தெரியாது
இப்போது அப்பத்தா விசயத்திற்கு வருவோம்.
நான் அந்தக் கவிதை எழுதியது 2004 மத்தியில். அப்போதே உடல்நலம் குன்ற ஆரம்பித்துவிட்டது. நான் எழுதிய கவிதை வரிகளைப்போலவே நாட்களாக நாட்களாக உருவத்தில் சிறியவர்களாகவும் ஆகிக் கொண்டே வந்தார்கள். மரணம் எதிர்பார்த்தது என்றாலும் அதன் இழப்பு மிக ஆழமானது. என் அப்பத்தா வாழ்ந்த வாழ்க்கை அத்தகையது. என் பிராத்தனையை படித்த நீங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கி அந்த கவிதையும் வாசித்திருந்தீர்களானால் நன்றாக இருந்திருக்கும். என் எழுத்தகளால் இயன்றவரை என் அப்பத்தாவை அந்தக் கவிதையில் கொண்டு வந்து இருப்பேன். அப்பத்தாவின் மூத்த மகன் ( பெரியப்பா) அவர்களின் மகள்தான் என் அக்கா. எங்கள் வீட்டு முதல் பெண்.
அதனால் அளவு கடந்த பிரியம் அவர்கள் மீது. இப்போது அவர்களீன் பெற்றோர் இருவரும் கிடையாது.
எங்கள் வீட்டில்(எங்கள் வீடு, சித்தப்பாவீடு) பூனைக்குட்டி உண்டு. அது எப்போதும் எங்கள் அப்பாமார்களின் மடியில்தான் இருக்கும் குழந்தையைப் போல. அத்தனை அரவணைப்போடு இருக்கும். அத்துனை ஏக்கம் நிறைந்த வீடு எங்களுடையது. பேரப்பிள்ளைகளை ஏந்தி கொஞ்சி விளையாட வேண்டிய தருணத்தில் அவர்கள் பூனைகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பத்தாவிற்கு இறக்கும் முன்பு எப்படியாவது பேத்திகளின் பிள்ளைகளை பார்த்துவிட வேண்டுமென்று. உடலில் உயிர்மட்டும் வைத்துக்கொண்டு கடைசி இரண்டு ஆண்டுகளை கழித்தார்கள். பாட்டி இறக்கும் நேரம் அக்காவிற்கு மருத்துவம் செய்து கொண்டிருந்தோம். தொடர்ந்து கொண்டிருகிறது இப்போதும்
சமீபத்தில் நான் புதுவீடு வாங்கினேன். பால் காய்ச்சிய அன்று எல்லோரும் புதிய வீட்டில் தங்கினார்கள். நான் மட்டும் தங்கவில்லை. காரணம் என் அக்காவின் குழந்தை அந்த வீட்டில் தவழும் போதுதான் நான் தலைசாய்க்க வேண்டும் என்ற என் எண்ணம்( அக்கா திருமணத்தின் போது மச்சினன் மோதிரம் போட்டவன் நான் – எனவே அவர் குழந்தையின் தாய்மாமன்). என் வீடு என் அக்காவின் தாய்வீடு. வீடு வாங்கியதில் பெற்றோருக்கு அளவு கடந்த மனநிறைவு. ஆனால் எனக்கு என் அக்காவின் குழந்தை தவழ்கையில்தான் வீடு வாங்கியதின் நிறைவு வரும். அப்பத்தா போன்று எல்லோரையும் அரவணைக்கும் வகையாக எங்களை மகிழ்வில் திளைக்க வைக்க அக்காவின் மகளாக வரவேண்டும் என்றேன். சொல்ல வந்தது பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மாமன்காரனாய் தொடர்ந்து சீர் செய்து கொண்டே இருக்க முடியும். அது அப்பாத்தா மாதிரியான அன்பானவள் என்றால் மகிழ்விற்கு எல்லையே இல்லை.
என் பிராத்தனை என்ற வார்த்தைக்கு பின்பு பலசூழல் உண்டு. முக்கியமாக உறவுகளற்ற தனிமை. உணர்வு ரீதியான காரணங்கள் உண்டு. நீங்கள் குறிப்பிடும் சனாதான வேதநெறி இந்து தரும வெங்கய உணர்வுகள் கிடையாது
அன்புடன்
முத்துகுமரன்
பி.கு:
தரமற்ற அனானிமஸ் பின்னூட்டங்களுக்கு இந்த பதிவில் அனுமதி கிடையாது.
மறுமொழிகள் (6)
மறுமொழிகள் (6)
மறுமொழிகள் (17)