அஞ்சலி – திரு.Y.S. ராஜசேகர ரெட்டி

ஆந்திர மாநில முதல்வர் திரு Y.S. ராஜசேகர ரெட்டி (1949 -2009) நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்து இருக்கிறார். ஏறத்தாழ 27 மணி நேர தேடுதலுக்குப் பின் அவரும் அவருடன் பயணம் செய்த மற்ற நால்வரும் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஆந்திரமக்களுக்கும் மற்றும் விபத்தில் மரணமடைந்த முதன்மைச் செயலாளர் திரு சுப்ரமணியம், பாதுகாப்பு அதுகாரி AS.வெஸ்லி, விமானிகள் SK.பாட்டியா, MS.ரெட்டி ஆகியோர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரது அரசு செய்த மக்கள் நலத்திட்டங்களுக்காகவே அவர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது முக்கியமானது. நல்ல தலைவர்களை இது போல் விபத்துகளில் இழப்பது நாட்டிற்கு பேரிழப்பே!

பதிவர் அனுராதா அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள்

காலம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று பதிவர் அனுராதா அம்மாவிற்கு முதலாம் ஆண்டு நினைவுநாள். மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரது பதிவுகள் அதன் உயரிய நோக்கமும் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டியவை.

அவர் மறைவின் போது தமிழ்மணம் வெளியிட்ட அறிவிப்பை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறேன்.

*




புற்றுநோயுடன் போராடிக் கொண்டே கொடிய அந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை தன் பதிவின் மூலம் நமக்கு அளித்து வந்த பதிவர் அனுராதா தன்னுடைய துன்பத்திலிருந்து இன்று விடுதலை அடைந்தார். இன்று காலை 9.52 மணிக்கு அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இருப்பினும் அவருடைய எழுத்து எப்பொழுதும் நம்முடன் இருந்து கொண்டேயிருக்கும்.

அவருடைய மறைவினால் துயருற்றிருக்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்மணம் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த பதிவர் அனுராதா போன்றவர்களின் உயிருள்ள எழுத்துக்கள்தான் வலைப்பதிவுகளின் வெற்றியையும், தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவையையும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன.

*




எந்த விதக் கொண்டாட்டங்களுமின்றி நகர்கின்றது எனது பிறந்த நாள்

செந்தில்நாதனுக்காக

சகபதிவர் செந்தில்நாதனுக்கு இன்று நடைபெறும் VAD அறுவைசிகிச்சை முழு வெற்றியடையவும், விரைவில் முழு குணம் பெறவும் என் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனைகள்.

அவர் இதயம் துடிக்க நம் இதயங்களின்/எண்ணங்களின்/பிராத்தனனகளின்/நம்பிக்கைகளின்/வாழ்த்துகளின் துடிப்புகள் துணையிருக்கட்டும்

அருவருப்பின் குமட்டலோடு

நிராகரிக்கப்பட்ட தன் உலகத்தின்
கவலைகளற்று
சாக்கடைச் சகதியப்பிக் கிடக்கிறான்
சடைக்கிழவன்
அம்பலப்படுத்தல்களற்ற நியதிகளுக்குள்
சீழ்பிடித்த குரூரங்கள் மறைத்த
மனிதத் தோல்கள் கடக்கின்றன
அருவருப்பின் குமட்டலோடு
எவ்வித வினைகளுமின்றி
சுத்தம் குறித்தான நாகரீகம் விளம்பி

வீணாப் போன தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம்:


வீணாப் போன தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று ஈழத் தமிழர்களுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரத்தமிழன்’ முத்துக்குமாரின் தந்தை மனக்குமுறலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ‘விகடன்’ குழுமத்தின் ‘ஆனந்தவிகடன்’ வார ஏடு வெளியிட்ட ‘வீரத்தமிழன்’ முத்துக்குமார் குடும்பத்தினருடனான நேர்காணல் வருமாறு:

முத்துக்குமார்… மறக்கக்கூடிய பெயரா!

உள்ளங்கையில் சாவை ஏந்திக்கொண்டு உலகத்துக்குக் கடிதம் எழுதிய கலகக்காரன். மூலக்கொத்தலம் சுடுகாட்டில் நள்ளிரவு 2 மணிக்கு பெருஞ்சோதியாக அவன் எரிந்துகொண்டு இருந்த காட்சி இப்போதும் என் விழி நனைக்கிறது. இந்தத் தலைமுறையில்தமிழ் நாடு கண்ட முதல் மக்கள் தன்னெழுச்சி, முத்துக்குமாரின்மரணம் தான். ஈழத் தமிழர்களுக்காகத் தன்னையே எரித்துக் கொடுத்த அந்த எழுச்சி இளைஞனின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது?

முத்துக்குமாரின் அப்பா குமரேசன், தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் தள்ளுவண்டியில் ஐஸ் க்ரீம் விற்கிறார். இனத்துக்காக இன்னுயிர் தந்தவனின் தந்தைக்கு வறுமையும் எளிமையுமே அடையாளம். ஆனால், ஓர் உண்மைப் போராளியின் தந்தையாக கம்பீரம் சுமக்கிறார் பேச்சில்...

”ஜனவரி 29-ம் தேதி வரைக்கும் குமரேசனோட மகனா இருந்தான் முத்து. இப்போ நானே என்னை ‘முத்துக்குமாரோட அப்பா’ன்னுதான் வெளியே சொல்லிக்கிறேன். எவ்வளவு கூட்டம்… அவன் செத்துப் பொணமா கெடக்கான். சுத்தி தமிழ்நாட்டு சனமே திரண்டு நிக்குது. யாருன்னே தெரியாத புள்ளைகள்லாம், ‘அப்பா, அப்பா’ன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டு அழுவுதுக, ஆறுதல் சொல்லுதுக. கொளத்தூர்லேர்ந்து மூலக்கொத்தலம் சுடுகாடு வரைக்கும் எங்க பார்த்தாலும் அவ்வளவு சனம். இந்த சனத்தை நம்பித்தானய்யா எம் புள்ள செத்துச்சு… ‘நம்ம செத்தாலும் இவங்கள்லாம் இருந்து போராடி அங்கே சாவுற நம்ம சனங்களை எப்படியும் காப்பாத்திடுவாங்க’ன்னு நினைச்சுத்தானே அவன் கரிக்கட்டையாக் கருகிக்கெடந்தான். திரண்டு வந்த புள்ளைங்கள்லாம் எவ்வளவு வேகத்தோடு இருந்துச்சுக… கோபத்தோட துடிச்சுதுக… கடைசியில எல்லாத்தையும் ஒண்ணும் இல்லாமப் பண்ணிட்டாங்களே…” – அடிமனதின் ஆதங்கம் வெடிக்கப் பேசுகிறார் குமரேசன். அருகில் முத்துக்குமாரின் தங்கை தமிழரசி தனது இரண்டு பிள்ளைகளுடன் அமர்ந்து இருக்கிறார். கொளத்தூர் வீட்டுச் சுவரின் புகைப்படத்தில் இருந்து எங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் முத்துக்குமார்.

‘அவனோட டைரியில, ‘என் மீது அக்கறைகொண்ட அனைவரும் பொறுத்தருள்க… இன்று என் வாழ்நாளில் பொன்னானதொரு நாள்’னு செத்துப்போன அன்னிக்கு எழுதிட்டுப் போயிருக்கான். இந்த மக்களுக்காக உசுரைத் தூக்கிக் குடுத்துட்டுப் போனானே… அப்பதான் நெனைச்சேன். ‘ஐயோ முத்து… நீ மகன் இல்லடா. என் அப்பன்’னு.

அவன் காசுக்காகச் சாகலை. அரசாங்கம் தர்றதாச் சொன்ன 2 லட்ச ரூபாய் காசைக்கூட வேண்டாம்னு சொல்லிட்டோம். அவனே அரசாங்கத்தை விமர்சனம் பண்ணிட்டுத்தான் செத்தான். அந்த அரசாங்கம் குடுக்குற காசை வாங்குறது அசிங்கம் இல்லையா? இந்த இனம் வாழணும்… நம்ம சனம் வாழணும்னு எரிஞ்சு சாம்பலான ஒவ்வொரு உசுருக்கும் நீங்க விலை வைக்க முடியுமாய்யா? அந்த உணர்ச்சிக்கும் உண்மைக்கும் முன்னாடி உங்க காசு தூசுய்யா!

எங்க பொழப்பு, வறுமை எல்லாம் எங்களோட.எல்லாரும் உழைச்சுத்தானே சாப்புடணும். அதை விடுங்க… நான் வருத்தப்படுறது எல்லாம் இந்த தியாகம், அவன் உருவாக்குன எழுச்சி எதாலயும் அந்த மக்களைக் காப்பாத்த முடியலையேன்னுதான். எல்லாம் இந்த வீணாப் போன தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலதான். இவங்க ஒழுங்கா இருந்திருந்தா, அந்த மக்களைக் காப்பாத்தி இருக்கலாம். ஆனாலும், முத்துக்குமாரோட உண்மையான தியாகம் என்னிக்கும் வீண் போகாதுன்னு நம்புறோம். என்ன ஒண்ணு… அவனை மறக்க முடிய மாட்டேங்குது. இன்னிக்கு நினைச்சாலும் கண்ணீர் தான் வருது”விழியோரம் துளிர்த்த நீர்த் துளி உருண்டோடப் பேசுகிறார்.

”இதான் முத்து மாமா ஃப்ரெண்ட்” என பிரபாகரனின் புகைப்படத்தை ஓடிவந்து என்னிடம் காட்டுகிறான் முத்துக்குமாரின் தங்கை மகன் மோனேஷ். முத்துக்குமார் சாகும்போது அவரது தங்கை தமிழரசி 8 மாதக் கர்ப்பம். பிறகு, பிறந்த அந்தப் பெண் குழந்தைக்குப் பெயர் முத்து எழில்!

”திருச்செந்தூர் பக்கம் கொழுவைநல்லூர்தான் எங்க சொந்த ஊர். 10 வருஷங்களுக்கு முன்னாடி எங்க அம்மா கேன்சர்ல செத்துப்போயிருச்சு. வசந்தகுமார்னு என் இன்னொரு அண்ணன் ரெண்டு வருஷம் முன்னாடி ஆக்ஸிடென்ட்ல செத்துட்டான். இப்போ முத்துக்குமாரும் செத்துட்டான். எங்க அம்மா பெத்த மூணு பிள்ளைகள்ல நான் மட்டும்தான் மிச்சம் இருக்கேன். எல்லாரும் அந்தப் பழைய வீட்டுல இருக்கும்போதுதான் செத்தாங்க. அதனாலதான் வீட்டை மாத்திக்கிட்டு இங்கே வந்துட்டோம். சொந்தக்காரங்கள்லேர்ந்து எல்லாரும் முத்துக்குமார் செத்ததும் நாங்க ஏதோ லட்சம் லட்சமா சம்பாதிச்சுட்டதா நினைக்குறாங்க. ஆனா, நாங்க இன்னிக்கும் இந்த வீட்டுக்கு 3 ஆயிரம் ரூபா வாடகையே ஒழுங்காக் குடுக்க முடியாமத்தான் கஷ்டப்படுறோம். அதுக்காக முத்துக்குமார் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்க விரும்பலை. தயவுசெஞ்சு அந்த மாதிரி எழுதிடாதீங்க. ஏன்னா, எங்க அண்ணன் பணத்துக்காகச் சாகலை. இனத்துக்காகச் செத்தான். அந்த மக்கள் நல்லா இருந்தா, அவங்களுக்கு ஒரு நல்ல வழி பொறந்தா… அதுவே எங்களுக்குப் போதும்” – அண்ணனின் வார்த்தைகளை அப்படியே பேசுகிறார் தங்கை.



என்னுடன் எழுந்து வழியனுப்ப வாசலுக்கு வருகிற முத்துக்குமாரின் அப்பா குமரேசன் சொல்கிறார், ”அவன் செத்ததுக்கு ஊர், உலகமே வந்து கொள்ளிப் போட்டுச்சு. நான் செத்தா கொள்ளி போட எனக்கு ஒரு ஆம்பளைப் பய இல்லையே!” என்பவரின்

கைகளை


இறுகப்


பற்றிக்கொள்கிறேன்


!.

தி.தே.இ

1949
1967
1969
1971
1989
1996
1999
2004
2006
2009
86
ராஜபக்சே
55
மகன்
தமிழன்
தி,தே. இ @ தி.தே.மு.க
வந்தே மாதரம்

சிங்களத் தீவினுக்கோர் காவல் புரிவோம்

இலங்கை தரை மற்றும் கடல் பகுதிகளை கண்காணிப்பதற்காக சென்னையைச் சேர்ந்த ”Banaras International Private Limited” நிறுவனத்துடன் 30மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பனராஸ் நிறுவனம் இதற்கான உபகரணங்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசிற்கு வழங்கும். இந்த நிறுவனம் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகன் ஜசித் சிங் பர்னாலாவும் அவரது நண்பர் நஜூமுதினும் இணைந்து நடத்தும் நிறுவனமாகும். இது குறித்து இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிக்கையில் வந்திருக்கும் செய்தி

Barnas International Private Limited, which has bagged a 30 million Sri
Lankan rupee contract to provide surveillance solutions in the Sri Lankan
capital, will also take up similar projects in the island’s northern regions
that had recently been wrested from the LTTE, company sources here told The
Times Of India.

Under the project, the entire Sri Lankan coast will come under a
specially- designed surveillance system with sophisticated thermal-imaging
cameras and a software that can detect the nature of the moving object.

“Thermal-imaging cameras, unlike conventional ones, are so powerful
that they can pick up images from distances nearly 20 km into the sea. A
specially-designed software will analyse the nature of the images and sound out
an alarm in the central control centre when a boat or ship approaches the
coast,” Barnas vice-president Sivaji Rao, who is taking care of the Sri Lankan
operations, told TOI.

He said the Sri Lankan government had realised the difficulty of
monitoring the entire coast manually and gone in for an unmanned surveillance
system. Sivaji Rao said the Sri Lankan government was worried about the security
situation and had embarked on the project of enhancing its surveillance systems
on a war footing.

“Apart from providing coastal security, all sensitive areas will be
brought under strict surveillance under the project. We are not using
conventional cameras and digital video recorders here but are using highly
sophisticated and specially-designed equipment and software. All the cameras
involved will be internet-enabled and can be monitored by senior officials even
when they are on the move through cell phones and laptops,” Sivaji Rao
added.
The company will also be taking up similar projects in the war-ravaged
northern parts. Although the control of these provinces had been wrested from
the Tigers, the Sri Lankan government is not yet ready to rule out a possible
comeback by the LTTE and is keen on nipping any extremist activities in the bud,
the sources added.

இவர்கள் இருவர் மீதும் அவ்வப்போது சர்ச்சைகளும் ஊழல் முறைகேடுகள் குறித்தான செய்திகள் தொடர்ச்சியாக வருவதுண்டு. இலங்கையின் முன்னாள் துணைத்தூதுவர் அம்சாவும் நஜீமுதினும் நெருக்கமானவர்கள் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழனுக்கு எதிரான வலை மிகத் தெளிவான திட்டமிடல்கள்ளோடே நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் சிங்கள அரசிற்கு உதவும் பணியில் நம் தமிழ் மென்பொருளாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் பயன்படுத்தப்படுவார்கள். சிங்களவன் வர்த்தக ரீதியான வீசியெறியும் எச்சில் துண்டுகள்ளுக்கு இது ஒரு மாதிரிதான். இது போன்று இன்னும் பல எச்சில் துண்டுகளை நம் தமிழகத்தை நோக்கி வீசியெறியக்கூடும். நாம் விழிப்புணர்வோடு இவைகளை அடையாளம் கண்டு எதிர்த்து போராடுதல் வேண்டும். இல்லையேல் பாரதி பாட்டை சிங்களத் தீவினுக்கோர் காவல் புரிவோம் என்று மாற்றிப் பாட வேண்டியதுதான்.

கூடு திரும்பல்

மெளனங்களான காயம் படர

மகிழ்வான நொடிகளைச் சுமந்து
மீண்டுமொரு கட்டாய
கூடுதிரும்பல்
மேலும்பிய விமானத்தின் இரைச்சலில்
சுவடற்றாதான வலிகள்
மேகத்திரள்களுக்குள் கரைகிறது
கண்ணாடி சாளரத்தின் வழியே
எதுவும் நடக்காதது போலவே
தரையிரங்கிப் போகிறது
நாடு திரும்பா வாழ்வு

கலைஞருக்கு நன்றி -வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அனுமதி

ஈழத்தில் அவலப்படும் உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரண கப்பலை அனுமதிக்க இலங்கை அரசு சம்மதித்து இருக்கிறது. இதற்காக துரித முயற்சி எடுத்த தமிழக முதல்வர் கலைஞருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் நன்றி.

பேசாதே இறையாண்மை

முதல் மூச்சை விடாது வெடித்துச் சிதறிய குழந்தைகள்
மறக்கமுடியாத தாய்களின் மரண நிர்வாணங்கள்
உறுப்பறுந்த உறவுகள்
சிதைக்கப்பட்ட தொப்புள் கொடி
மொட்டைப் பனையாய் என்னை
வேரறுத்துவிட்டு
பேசாதே இறையாண்மை

அடுத்த பக்கம் »